முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஊடகங்கள் செய்தி சேகரித்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கோம்பாவில் கிராமசேவையாளரால் நேற்று புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கோம்பாவில் பகுதியில் உள்ள திம்பிலி குளம் அமைந்துள்ள இடத்தில் காடழிப்பும் குளக்கரையில் சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு ஊடகவியலாளர்கள் சென்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினரை தொடர்பு கொண்டபோது அவர்கள் குறித்த காணி அபகரிப்பு தொடர்பில் காணி உரிமையாளர்களால் முறைப்பாடு பதிவுசெய்யப்படவில்லை என தெரிவித்தனர்
குறித்த விடயம் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய கோம்பாவில் கிராமசேவையாளரால் நேற்று மாலை புதுக்குடியிருப்பு காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்
இந்நிலையில் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்