யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தினால் கூறப்பட்ட அளவிலும் பார்க்க அதிகளவான மதுபானப் போத்தல்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறையினர் தெரிவித்தனர்
யாழ்ப்பாண மாவட்ட காவற்துறை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவரிடமும் 90 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மே 21ஆம் திகதி நாட்டில் பயணத்தடை நடைமுறைக்கு வந்த நிலையில் சுமார் ஒரு மாதங்களின் இன்று மதுபான சாலைகள் திறக்கப்பட்டன.
இதன்போதே 10 மதுபானப் போத்தல்களுக்கு மேல் கொள்வனவு செய்து எடுத்துச் சென்ற ஐவரே காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண காவற்துறை பிரிவில் மூவரும் கோப்பாய் காவற்துறை பிரிவில் ஒருவரும் சுன்னாகம் காவற்துறை பிரிவில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காவற்துறை நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.-40