கொரோனா தொற்றால் மேலும் 52 பேர் மரணம்!

corona deth
corona deth

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று  இடம்பெற்ற 52 மரணங்களில் 30 ஆண்களினதும், 22 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.