உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இன்று கையளிப்பு

uthaya kampanpila
uthaya kampanpila

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரும் அவநம்பிக்கை பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணியை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டேயில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்திலிருந்து நாடாளுமன்றம் வரை இந்த வாகன பேரணி பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்