வவுனியாவிற்கு விரைவில் பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.
வவுனியாவிற்கான பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியை சந்தித்து பி.சி.ஆர் இயந்திரத்தின் அவசர தேவையினை தெரிவித்தோம்.
உடனடியாக குறித்த அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு விரைவில் வவுனியாவிற்கு இயந்திரத்தினை வழங்கும்படி பணிப்புரை வழங்கினார்.
அதேசமயம், எதிர்வரும் மாதம் கட்டாயம் பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்குவதாக உறுதியளித்தார்.
இதேவேளை தான் ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளை வவுனியாவிற்கு அனுப்பி வவுனியா வைத்தியசாலை ஆய்வுகூடத்தினை பார்வையிட்டமை தொடர்பிலும் இதன்போது குறிப்பிட்டார்.