மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 6 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி. றிஸ்வான் இன்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது நேற்று திங்கட்கிழமை (21) துப்பாக்கிசூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலரை இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 6 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.