வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் எழுமாறாக பிசிஆர் பரிசோதனை

IMG 20210622 WA0212
IMG 20210622 WA0212

கொரோனா தீவிரமடைந்துள்ளதையடுத்து வவுனியா – சூசைப்பிள்ளையார்குளம் மற்றும் சகாயாமாதாபுரம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் இன்று (22.06) எழுமாறாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, சகாயாமாதபுரம் வைரவர் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொவிட் தாக்கம் காரணமாக மரணமடைந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தை சேர்ந்த 07 பேர் தொற்றாளர்களாக அப் பகுதியில் நேற்று (21.06) இனங்காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் அதிகரித்து வரும் கொவிட் பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக சூசைப்பிள்ளையார்குளம் மற்றும் சகாயாமாதாபுரம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. கொவிட் தாக்கம் காரணமாக சகாயாமாதாபுரம் மற்றும் வைரவகோவிலடிப் பகுதிகளில் முற்றாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வீதியில் நின்றோர் மற்றும் வீடுகளில் இருந்தோர் என 55 பேருக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.