தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது

kaithu
kaithu

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் அதிகளவானோர் எம்பிலிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

எம்பிலிபிட்டியில் 96 பேரும், மாத்தளையில் 73 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியை பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 42,347 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.