மட்டு கல்லடி பாலத்திலிருந்து தற்கொலை செய்ய வாவியில் குதித்த இளைஞர்

WhatsApp Image 2021 06 23 at 15.57.25
WhatsApp Image 2021 06 23 at 15.57.25

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து தற்கொலை செய்ய வாவியில் குதித்த இளைஞர் ஒருவரை வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நீரில் இருந்து காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (23) பகல் 3 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

களுவாவளை 4 ம் சிறி முத்துமாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பாலத்தின் அருகில் இளைஞர் கொண்டுவந்த பை மற்றும் செருப்பு என்பவற்றை கழற்றிவைத்துவிட்டு பாலத்தின் மேல் இருந்து சம்பவதினமான இன்று பகல் 3 மணியளவில் வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக வாவியில் குதித்துள்ளான்

அப்போது அந்த பகுதியில் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக வாவியில் குதித்து இளைஞரை காப்பாற்றி கரைசேர்த்ததையடுத்து அவனை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர்.

இதுதொடர்பான விசாணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.