வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 77 வயது முதியவர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று (23) மரணமடைந்துள்ளார்.
தென்பகுதியை சேர்ந்த குறித்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வவுனியா மூன்றுமுறிப்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் நேற்று
அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்துள்ளார்.