யாழில் வாள்வெட்டு ; ஒருவர் படுகாயம்

தாக்குதல்
தாக்குதல்

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் மணல் கொள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள் வெட்டு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் நேற்றைய தினம் மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரு குழுக்களுக்கு இடையில் மணல் ஏற்றும் இடத்தில் வாய் தர்க்கம் ஏற்பட்டு அது வாள் வெட்டில் முடிவடைந்துள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்காகிய 50 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.