மட்டக்களப்பு கறுத்தபாலத்தில் நடைபெற்ற விபத்தில் 2பேர் உயிரிழப்பு! 4 பேர் காயம்!

WhatsApp Image 2021 06 25 at 17.24.29 1
WhatsApp Image 2021 06 25 at 17.24.29 1

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி பாலத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள செங்கலடி பதுளைவீதி பதுளை வீதியிலுள்ள கறுத்தப்பாலத்திற்கு அருகிலுள்ள பாலத்தில் கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி இராணுவத்தினர் இராணுவ ரக்வண்டியில் சம்பவதினமான (25) பிற்பகல் 4 மணிக்கு இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு பிரயாணித்தபோது கறுப்பு பாலம் அருகில் ரக்வண்டி வேகக்கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழ் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை நீரோடையில் இருந்து ரக்வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் கனரகவாகனம் கொண்டு இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதுடன் ஒருவரின் சடலத்தை தேடிவருவதாக தற்போது அங்கிருந்து தகவல் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.