தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வாகத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

123456
123456

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வகத்தின் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முன் பதவினை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே குறித்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வேரஹெர, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வகத்தின் கிளைகள் பொது மக்களுக்காக திறக்கப்பட மாட்டாது.

மூடப்பட்டிருக்கும் கிளைகளில் ஏற்கனவே நியமனங்கள் செய்தவர்களுக்கு எதிர்காலத்தில் மாற்று திகதி மற்றும் காலம் குறித்து உரிய வகையில் தெரிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.