சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட 625 இடங்கள் சுற்றிவளைப்பு

Facebook Party

மேல் மாகாணத்தில், சுகாதார விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த சூதாட்ட விடுதிகள், இரவுநேர களியாட்ட விடுதிகள், பந்தைய மையங்கள் உள்ளிட்ட 625 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 247 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.