கல்விக்கு தொலைக்காட்சி வேண்டுமெனக்கூறி பதுளையில் ஆர்ப்பாட்டம்

IMG 20200113 WA0012
IMG 20200113 WA0012

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்து, பதுளை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (2021-06-28) பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகார வர்க்கத்தினரின் சொகுசு வாழ்க்கைக்காக, எமது பிள்ளைகள் கல்விக்காக மரங்களிலும், மலைகளிலும் ஏற வேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உடனடியாக கல்விக்கு தேசிய தொலைகாட்சி அலைவரிசையொன்றை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும். நிகழ்நிலை கல்வி அசாத்தியமற்ற நிலையில், மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.