வடக்கு கடல் வளத்தை வெளிநாட்டவர்கள் சுரண்டுகின்றனர் – சுமந்திரன்

MA Sumanthiran 720x450 1 1
MA Sumanthiran 720x450 1 1

வடமாகாண கடல் வளத்தை வெளி மாவட்ட மீனவர்கள் கையகப்படுத்தும் நிலை மாறி தற்போது வெளிநாட்டவர்கள் சுரண்டும் நிலை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பூநகரி கௌதாரிமுனை கடல் பரப்பில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடும் சீன நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் எஸ்.சிறிதரன் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து, ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.