அஸ்ட்ரா செனகா தடுப்பூசி பெற்றுகொண்டோருக்கான அறிவிப்பு

.jpg
.jpg

அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாம் செலுத்துகையாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனை குழு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் அவசர நிலைமைகளின் போது மொடர்னா தடுப்பூசியை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது