மேல் மாகாணத்தில் இன்று 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் இன்று கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

அதனால் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.