வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் இன்னும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகின்றது.
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் தெரிவுசெய்யப்பட்டாலும், ஜனாதிபதியால் அவருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாள்ஸ் அண்மையில் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் வடக்குக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டால் அவருக்கான சம்பளத்தில் குழப்பம் ஏற்படும்.
அதாவது பல்லாயரம் ரூபாவாக அதிகரிக்கும்.இந்த நிலையில் செயலாளராக அவர் ஒரு மாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆளுநர் பதவியை ஏற்பார் என்றுஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன