வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிக்கு கொரோனா தொற்று உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையில் அவருடன் தொடர்பை பேணிய இ.போ.ச ஊழியர்கள் மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பயணத்தடையின் பின்னர் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்தில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதி நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.