வவுனியாவில் இராட்சத முதலை மீட்பு!

4653 473d957023ec
4653 473d957023ec

வவுனியா நெளுக்குளத்தில் குடியிருப்பிற்குள் நுழைந்த முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் முதலை ஒன்று நுழைவதை அவ்வீட்டார் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களின் துணையுடன் குறித்த முதலையினை மீட்டுள்ளனர்.இதனைத்தொடர்ந்து வன ஜீவராசி திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசி திணைக்களம் முதலையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக முதலைகள் குடியிருப்பு பகுதிகளிற்குள் வருகின்றமையானது வழமையாக இடம்பெறுகிறது.

இதேவேளை பிடிபட்ட முதலை ஆறு அடி நீளமான இராட்சத உருவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.