இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கான ஐந்து ஏக்கர் காணி தொகுதி பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பாடசாலைக்கான மீள் அபிவிருத்தி பணிகளுக்காக 5 ஏக்கர் காணியை வழங்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்பாளர் செந்தில் தொண்டமானினால் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்து.
இதன்படி குறித்த காணி தொகுதியை பாடசாலைக்கு வழங்குவதற்கான ஆவணம் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி திமுது வெருனுகொடவினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளிடம் கையளிக்கப்பட்டது.