கடந்த 24 மணிநேரத்தில் 325 பேர் கைது

curfew check 1 768x384 1
curfew check 1 768x384 1

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 325 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவற்றில் அதிகளவான கைதுகள் கம்பளையில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி அங்கு 64 பேரும், கண்டியில் 61 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 46,260 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.