கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி 3 சொகுசு ரக பேருந்துகளில் பயணித்த 49 பேரில் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
49 பேருடன் மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 பேருந்துகளை தும்பலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியின் பாதுகாப்பு தரப்பினர் வழிமறித்தனர்.
அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்களோ அல்லது பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.
இந்த பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த பேருந்துகளில் பயணித்த ஏனையவர்கள் அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.