தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 563 பேர் கைது!

thanimai 3
thanimai 3

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 563 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 46,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று அதிகளவானோர் மாத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 564 பேர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.