மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள குடாவெட்டை வயற் பிரதேசத்தில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று சனிக்கிழமை (3) மீட்கப்ப்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த கந்தன் நாகராசா (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வழமைபோன்று சம்பவதினமான நேற்று காலையில் மாடு மேய்க்கச் சென்றவர் மாலையாகியதும் வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டபொழுது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் குடாவெட்டை காட்டுப் பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணகளை கரடியனாறு காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.