26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசி கிடைக்கும் முதலாவது நாடு இலங்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டிற்கு கிடைக்க பெறும் பைசர் தடுப்பூசிகளை, செலுத்தும் தரப்பினர் தொடர்பில் சுகாதார அமைச்சின விசேட குழுவினர் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.