நேற்றைய தினம் நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களுள் 54 பேர் குளியாப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக
காவற்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை காரணமாக 47,579 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.