சௌபாக்கியா வேலைத்திட்டம் புதுக்குடியிருப்பில் ஆரம்பம்

received 2602221940083801
received 2602221940083801

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவின் கைவேலி கிராமத்தில் 30 பயனாளிகளை உள்ளடக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (05) இடம்பெற்றது

புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பெயர்ப்பலகையை திறந்து வைத்து அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர் ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர், புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் உள்ளிடட அதிகாரிகளும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்