இளம் குடும்ப பெண்ணை காணவில்லை; வவுனியா காவற்துறையினரிடம் முறைப்பாடு!

IMG 20210705 210109
IMG 20210705 210109


வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று  நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொக்குவெளி  மகாறம்பைக்குளம்  அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா  என்பவரே  காணாமல் போயுள்ளார். 

IMG 20210705 210137

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த பெண் நேற்றுமுன்தினம் (04)ம் திகதி மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து  அருகாமையில் உள்ள கடைக்கு சென்று முட்டை வேண்டி வருவதாக கூறிவிட்டு வெளியேறி சென்றுள்ளார். இந்நிலையில்  பலமணிநேரங்கள்  தாமதமாகியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டு கேட்ட போது அங்கும் அவர் செல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் நேற்று (05) வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு  செய்துள்ளார்கள்.

IMG 20210705 210036

குறித்த  குடும்பபெண் திருமணம் முடித்து ஐந்து வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் சில நாட்களாக கணவரை பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றால்  வவுனியா காவற்துறையினருக்கோ அல்லது கீழ் காணப்படும் தாெலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு  தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
தொடர்புகளுக்கு: 0765462984