முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21 தாக்குதலை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததன் மூலம் பாரிய படுகொலைக்கு வழிவகுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் மேற்படி இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.