முன்னிலை சோஷலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் வகையில் கொழும்பு 2 ராமநாயக்க வீதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த குற்றச்சாட்டில் இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் வகையிலான நிகழ்வுகளுக்கு மறு அறிவித்தல் வரை அனுமதியளிக்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், காவல்துறைமா அதிபருக்கு நேற்று அறிவித்தார்.
அதற்கமையவே, இன்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.