பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை குத்தகைக்கு விட எவ்வித தீர்மானமும் இல்லை

Petrol 850x460 acf cropped
Petrol 850x460 acf cropped

இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனத்தை குத்தகைக்கு விடவோ அல்லது தனியார் மயமாக்கவோ திட்டங்கள் உள்ளதா என்பது குறித்து இன்று (07) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீன நிறுவனத்திற்கு அல்லது வேறு வௌிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்கள் கூட இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.