கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமந்த வித்யாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகியோர் உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடை- போகஹகும்புர காவல்நிலையத்தில் இன்று முன்னிலையானபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது