முல்லைத்தீவு அளம்பில் வடக்கு கடற்கரைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் புள்ளி சுறா ஒன்று கரையொதுங்கியுள்ளது.
தென்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்த கப்பல் நீரில் மூழ்கியதை தொடர்ந்து நாட்டின் கரையோரப்பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.
கடல் ஆமைகள்,சுறாக்கள்,டொல்பின்கள் போன்ற உயிரினங்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில் 07.07.21 அன்று முல்லைத்தீவு அளம்பில் வடக்கு கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் புள்ளி சுறா ஒன்று கரைஒதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீனவர்களினால் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.