முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தினம் – தமிழ்மாறன், இன்று (07) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்று சென்றதை அடுத்து, புதிய கல்விப் பணிப்பாளர் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு நியமிக்கப்படவில்லை.
முல்லை வலயத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் கடந்த வாரத்திற்கு முன்னர் வடமாகாண கல்விதிணைக்களத்தினால் அறிவிக்ப்பட்ட போதும் அவர் தனது பதவியினை பொறுப்பேற்பதில் மூன்று மாதங்கள் காலக்கெடு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்னிலையில் வடமாகாண ஆளுநர் அவர்கள் உடனடியாக பதவியினை பொறுப்பேற்குமாறு பணித்ததற்கு அமைய இரத்தினம் – தமிழ்மாறன் அவர்கள் கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.
இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு 1 ஐ சேர்ந்த அலுவலர் என்பதோடு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள் வடமராட்சி கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் ஆவார்.