அத்துருகிரிய பகுதியில் ஒரு தொகை ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் டுபாய்க்கு தப்பிச் சென்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் சாமீ என்ற சமிந்த புத்திகவின் உதவியாளர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.