முல்லைத்தீவு – கள்ளப்பாட்டுப் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 06 பேரும் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.