“கனடா நம் தாயகம்” திரு.குணராஜா உதயராஜா அவர்களின் ஏற்பாட்டில் புதிய வீடு

005ddc 1
005ddc 1

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயற்பாடுகளாக “வாழ்வாதார உதவிகளான” கோழிக்கூடுகள், கோழிகள் வழங்குதல், தையல் இயந்திரம் & துவிச்சக்கர வண்டி வழங்குதல், பயன்தரு மரக்கன்றுகள் வழங்குதல், சிறுகடைக்கான பொருட்கள் வழங்குதல், உலருணவுப் பொதிகள் வழங்குதல், உணவு வழங்குதல், மற்றும் “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் செயல்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கான மாலைநேர பாடசாலை, கற்றல் உபகரணங்கள் வழங்குதல், பல்கலைக் கழக மாணவர்களுக்கான உதவி போன்ற பல்வேறு விடயங்களை “நல் உள்ளங்களின் நிதிப் பங்களிப்பில்” நாம் செயற்படுத்தி வருகின்றது.

வவுனியாவில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயற்பாடுகளில் ஓர் திருப்புமுனையாக “மாணிக்க மனை” எனும் புதியதோர் வீடு கட்டி இன்று உத்தியோகபூர்வமாக உரிய பயனாளிகளிடம் கையளிக்கப்பட உள்ளது. இதற்கான முழுமையான நிதிப் பங்களிப்பை மட்டக்களப்பு தன்னாமுனையை சேர்ந்தவரும், கனடாவில் வதியும் சமூக ஆர்வலருமான “கனடா நம் தாயகம்” உரிமையாளரான திரு.பிரின்ஸ் குணரட்ணம் அவர்கள் வழங்கி வைக்க, இதற்கான ஏற்பாட்டை புங்குடுதீவை சேர்ந்தவரும் கனடாவில் வதியும் சமூகபற்றாளனுமான “கனடா நம் தாயகம்” உரிமையாளர்களில் ஒருவரான திரு.குணராஜா உதயராஜா அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

பல்வேறு சமூக, அரசியல் கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வவுனியா பிரதேச செயலாளர் திரு.கமலதாசன் அவர்களினால் கையளிக்கப்பட்ட உள்ளது.