அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் குளிரூட்டப்பட்ட பேருந்து திடீரென சம்மாந்துறை வீரமுனை ஆண்டியடிச் சந்திக்கருகில் வேக கட்டுபாட்டையிழந்து மின்கம்பம், மதில் ஆகியவற்றுடன் மோதி அருகேயுள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளது.
இதன்போது குறித்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சிறுசிறு காயங்களுடன் மீட்கப்பட்டதுடன், சாரதி காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.