மன்னார் நகரில் ‘பைசர்’ கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு- மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுகின்றனர்.

DSC 2795
DSC 2795

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) காலை தொடக்கம் ‘பைசர்’ கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 3 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுகின்றனர்.

DSC 2809 2

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த கிராமங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘பைசர்’ கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

தலைமன்னார்,பேசாலை,மன்னார்,வங்காலை,முத்தரிப்புத்துறை மற்றும் மடு பகுதியை சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) 3 ஆவது நாளாக மன்னார் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளில் ‘பைசர்’ கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்று வருகின்றது.

DSC 2774

நாளை (12) திங்கட்கிழமையும் குறித்த பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெறும்.இந்த நிலையில் மக்கள் ஆர்வத்துடன் குறித்த தடுப்பூசியை பெற்றுச் செல்கின்றனர்.

மன்னார் மாவட்டத்திற்கு என சுமார் 20 ஆயிரம் ‘பைசர்’ தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி, உற்பட சுகாதார துறையினர் மற்றும் இராணுவம் , வான்படை அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

DSC 2792