இளைஞர் கொலை: தாய், தந்தை உட்பட 4 பேர் கைது!

1625989953 1349384 hirunews
1625989953 1349384 hirunews

கண்டி – ஹசலக பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவரது தாய், தந்தை, சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகராறின் போது ஏற்பட்ட கைகலப்பில், குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.