நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 432 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அதிக மழையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.