355 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கடற்பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடம் இருந்து 103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.