நுவரெலியாவில் விபத்து; இருவர் படுகாயம்

accident 1 720x375 1
accident 1 720x375 1

நுவரெலியா- பத்தனை, கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (12) காலை, கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாராக இருந்த வான் ஒன்றின் மீது எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.