தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கைது!

thanimai 1
thanimai 1

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49,643 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார்.