வவுனியாவில் சௌபாக்கியா விற்பனை நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

IMG 3768
IMG 3768

அரசின் வறுமை ஒழிப்பு செயற்திட்டத்திற்கமைய உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தின் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வவுனியா  தாண்டிக்குளம் பகுதியில் இன்று (13) இடம்பெற்றது.

குறித்த திட்டத்தின் கீழ் சாந்தசோலை மற்றும் மரக்காரம்பளை, ஶ்ரீராமபுரம் ஆகிய கிராமங்களில் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான, விற்பனை நிலையங்கள் தாண்டிக்குளம் ஏ9 வீதியின் கரையில் அமைக்கப்பட்டு விற்பனை செயற்பாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.