மர்ஹும் எம்.எச்.எம். ஷம்ஸின்; 19 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

ஷம்ஸ்
ஷம்ஸ்

நாடறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் கலைஞருமான மர்ஹும் எம்.எச்.எம். ஷம்ஸின்; 19 ஆவது நினைவேந்தல் நிகழ்வு ‘நினைவில் வாழும் ஷம்ஸ்’ எனும் தொனிப்பொருளில் நாளை 15 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு ஒன்லைனில் சூம் தொழில்நுட்பத்தின் வாயிலாக இடம்பெறவுள்ளது.

எம்.எச்.எம். ஷம்ஸ் மன்றத்தின் ஏற்பாட்டில், பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வரவேற்புரை சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில், சிரேஷ்ட ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களுமான தெனகம ஸ்ரீPவர்தன, என்.எம். அமீன், திக்குவல்லை கமால், எம்.ஏ.எம். மஸாஹிர், அன்பு ஜவஹர்ஷா, ஜவாத் மரைக்கார், லரீனா ஏ.ஹக், மேமன்கவி, ஒலுவில் ஜே.வஹாப்தீன், முருகபூபதி- அவுஸ்ரேலியா, மும்தாஸ் ஹபீல், தாஸிம் அஹமது, ரத்னசிரி விஜேயசிங்க ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

அத்தோடு, கவி வாழ்த்து பஸ்மினா அன்சார், நன்றியுரை ஷம்ஸ் பாஹிம் ஆகியோர் நிகழ்த்துவதோடு, நாச்சியாதீவு பர்வீன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை மேற்கொள்கிறார்.
சூம் வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்வில் ஆர்வலர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இணைந்து கொள்ள முகவரி
மீற்றிங் ஐடி : 814 0005 9380

பசிகோட் : 123456