கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி

Death body 720x450 1
Death body 720x450 1

வனாத்தவில்லு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மங்கலபுர பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வனாத்தவில்லு, மங்கலப்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.