புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 250 கிலோ வெடிகுண்டு மீட்பு

IMG 20210714 231952
IMG 20210714 231952

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

போரின் போது வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது.

சுமார் 250 கிலோவிற்கும் அதிக நிறைகொண்ட குறித்த குண்டினை இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த குண்டியை அகற்றுவது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.